/ ஆன்மிகம் / அஷ்டோத்தர கதம்ப மாலை
அஷ்டோத்தர கதம்ப மாலை
ஸ்ரீ கணேச அஷ்டோத்தர சத நாமாவளி துவங்கி, ஸ்ரீ ஈசான்யன் அஷ்டோத்தர சத நாமாவளி ஈறாக 137 சத நாமாவளிகளின் தொகுப்பு நுால். சத நாமாவளிகளை உச்சரித்து இறைவனை வழிபடுவதற்கு ஏற்ற வகையில் பெரிய எழுத்துக்களில் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கணேச அஷ்டோத்தர சத நாமாவளிகள் ஒன்பது பகுதிகளாக உள்ளன. ஸ்ரீ சண்முக அஷ்டோத்தர சத நாமாவளி ஆறுமுகங்களுக்கும் ஆறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. சித்தி தேவி, புத்தி தேவி, வள்ளி, தேவசேனாவுக்கும் தனித்தனியே நாமாவளிகள் இடம் பெற்றுள்ளன. சிவன், தக்சிணாமூர்த்தி, நந்திகேஸ்வரர், பைரவர், இந்திரன் என தெய்வங்களுக்கு நாமாவளி இடம் பெற்றுள்ள நுால். – புலவர் சு.மதியழகன்




