/ ஆன்மிகம் / கந்தபுராணத்தில் தவம்
கந்தபுராணத்தில் தவம்
கந்தபுராணத்தில் தவத்தின் அவசியம், மேன்மை, மகிமையை வலியுறுத்துவதை விளக்கும் நுால். திருமால், இந்திரன், முருகன், அம்பிகை கடவுள்கள், அகத்தியர் உட்பட முனிவர்கள், சூரபத்மன் போன்ற அரக்கர்களின் 48 தவங்கள் பற்றிய நிகழ்வுகளும் பெற்ற வரங்களும், அவற்றின் மகிமையும் இடம் பெற்றுள்ளன. இந்திரன் ஊழ்வினை துன்பத்தை போக்க, சிவபூஜை தவம் செய்ததை தெளிவாக குறிப்பிடுகிறது. சூரபத்மன் தவத்தின் பயனால் வரம்பிலாத அருள் பெற்று சேவல், மயிலாக முருகனை தாங்கும் பேறு பெற்ற நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்கண்டேயரின் சிவபூஜை தவம், தாரகன் பெற்ற தவப்பயன் உட்பட பல விபரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பேறு பெற வழிகாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன்




