/ வரலாறு / நிர்வாகவியலில் சோழப்பேரரசு
நிர்வாகவியலில் சோழப்பேரரசு
தமிழகத்தில் சோழ மன்னர்களின் நிர்வாகம் மற்றும் ஆட்சி சிறப்புகளை ஆராய்ந்து கருத்துகளை எடுத்துக் கூறும் நுால். சோழ மன்னர்கள் கடல் கடந்து வாணிபம் செய்தது குறித்த விபரங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு உரிய ஆதாரங்களையும் எடுத்துரைக்கிறது. சமுதாய நலத்திட்டங்களை அமல்படுத்தியது, நிர்வாக நடைமுறையில் காட்டிய அக்கறையை அறிய தருகிறது. கிராம நிர்வாகத்தில் குடவோலை என்ற நடைமுறை, நீர் மேலாண்மை நிர்வாக உத்திகளை எடுத்துக் காட்டுகிறது. கோவில் மற்றும் கோட்டை அமைப்பதில் சிறப்புடன் செயல்பட்டதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிய தருகிறது. சோழர்களின் படை நிர்வாகம் மற்றும் போர் வியூகங்களையும் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கும் நுால். – மதி