/ கட்டுரைகள் / பட்டமும் பதவியும் பாமரனுக்கும் உதவட்டும்
பட்டமும் பதவியும் பாமரனுக்கும் உதவட்டும்
சமூகப் பார்வையை வெளிப்படுத்தும் கட்டுரை தொகுப்பு நுால். பல தரப்பட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் பாமர மக்களின் அவதி, மனதைக் கனக்க வைக்கிறது. கைம்பெண்கள் புனர்வாழ்வுக்காக ஆதங்கம் கொள்வதிலும், ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதிலும் ஆழ்ந்த அக்கறையை புரிந்து கொள்ள முடிகிறது. வாடகைக் கார் ஓட்டுனர்கள், உணவு வினியோகிக்கும் தொழிலாளர்களின் கடின வாழ்க்கையும், உழைப்புச் சுரண்டல்களும் புள்ளி விபரங்களோடு விளக்கப்பட்டுள்ளன. கருத்து முரண்கள் நடுநிலையோடு முன்வைக்கப்பட்டுள்ளன. மக்கள் நலனுக்கான நேர்மறைச் சிந்தனைகளை உள்ளடக்கிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு