/ இசை / 1500 இராகங்களின் ஆரோகண அவரோகணங்கள்
1500 இராகங்களின் ஆரோகண அவரோகணங்கள்
இசை, ராகங்களை பற்றிய விரிவான நுால். இசை எவ்வாறு தோற்றம் பெற்றது என விளக்குகிறது.கர்நாடக இசை, இந்துஸ்தானியின் நுட்பங்களை குறிக்கிறது. இசை வித்தியாசமான ஒலிகளால் உண்டாக்கப்படுவதை குறிப்பிடுகிறது. வேறுபட்ட ஒலிகளை ‘ஸ்வரம்’ என்கிறது. இயற்கை ஒலிகள் மிருகம், பறவை குரல்களில் இனம் காணப்பட்டதாக சொல்கிறது.ராகங்களில் 72 மேளகர்த்தா மற்றும் எழுத்துகளை பட்டியல் போட்டு காட்டுகிறது. மொத்தம் 1,720 ராகங்கள் தரப்பட்டுள்ளன. இசை பயில்வோருக்கு உதவும் நுால்.– புலவர் ரா.நாராயணன்