/ தீபாவளி மலர் / தினமலர் தீபாவளி மலர் 2015
தினமலர் தீபாவளி மலர் 2015
மனத்தூய்மைக்கு, மகா பெரியவர் தரும் ஆலோசனையுடன் துவங்குகிறது, ‘தினமலர்’ தீபாவளி மலர். அஞ்ஞான இருளை அகற்றுவதே தீபாவளி என, ஜீயர் சுவாமிகள் சொன்னது, காசி, கங்கா ஸ்நானத்தின் சிறப்புகள் என, ஒவ்வொரு பக்கத்திலும், தீபாவளியும் ஆன்மிகமும் இழையோடும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வாக்கு வன்மையில் மிளிர்ந்த வாரியார், புலவர்களுக்காக பாடிய அவ்வையார் என, சொல்வன்மையை போற்றும் கட்டுரைகளை தொடர்ந்து, கண்ணதாசனின், அர்த்தமுள்ள இந்து மதம் இடம்பெற்றுள்ளது பொருத்தம். எம்.ஜி.ஆர் நினைவலைகள், மனோரமா ஆல்பம், இவங்க தீபாவளி, இளவரசு 100 ஆகிய பக்கங்கள், திரை ரசிகர்களுக்கான சிறப்பு பகுதிகளாக உள்ளன. வண்ணப்படங்களுடன் இடம் பெற்று இருக்கும், ‘தீபாவளி – தோன்றிய வரலாறு’ உள்ளிட்ட சில கட்டுரைகள், தினமலர் வாசகர்களின் ஆன்மிக தேடலுக்கு விலையளிப்பவை.நடுவூர் சிவா