/ மாணவருக்காக / களிப்பூட்டும் கணிதக் கோட்பாடுகள்
களிப்பூட்டும் கணிதக் கோட்பாடுகள்
கணித உலகில் உலா வரும் பல்வேறு தேற்றங்களில் எது மிக முக்கியத்துவம் பெற்றது; இருபடி சமன்பாடு என்றால் என்ன. ராமானுஜன் சிந்தனையில் உதித்த சிலிர்ப்பூட்டும் சூத்திரங்கள், இணையத்தை அதிர வைத்த கணிதப் புதிர்கள், தேதியை கொடுத்தால் உடனடியாக அது எந்த கிழமை என கணித்து கூற முடியுமா, நோபல் பரிசுக்கு இணையான கணிதத்திற்கான ஏபல் பரிசை இந்தியாவில் சென்னையில் பெற்றவர் யார்?இது போன்ற நாம் இதுவரை அறிந்திராத பல புதிய தகவல்களின் களஞ்சியமாக, முனைவர் இரா.சிவராமனின், ‘களிப்பூட்டும் கணிதக் கோட்பாடுகள்’ என்ற இந்த நுால் அமைந்திருக்கிறது.– இளங்கோவன்