/ பயண கட்டுரை / கற்பதுவும் கருதுவதும்
கற்பதுவும் கருதுவதும்
வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பயணிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள், பல சமயங்களில் சிறந்த பாடங்களாகி விடுகின்றன. அவை சிறப்பாக வழிநடத்தும் ஆசிரியர்களாகவும் அமைந்து விடுகின்றன. மனதில் ஏற்படும் தாக்கங்கள், அவற்றின் விளைவால் ஏற்படும் எண்ணக் கோர்வைகளைத் தொகுத்து, கற்பதுவும் கருதுவதும் என தலைப்பிட்டு கருத்துகளை வழங்குகிறது இந்த புத்தகம். பழைய டைரிகளில் அவ்வப்போது பதிவு செய்த எண்ணங்கள், நடந்து வந்த பாதையை இனிமையாக எடுத்துக்காட்டும். இனி எடுக்க வேண்டிய முடிவுகளையும் சொல்லும் ஆசானாக பல தருணங்களில் அமையும். இது போன்றவற்றை சிறப்புற விளக்கும் நுால்.– இளங்கோவன்