/ பயண கட்டுரை / மலேசிய நாடும் பதினோராவது பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடும்
மலேசிய நாடும் பதினோராவது பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடும்
மலேஷிய நாட்டில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்து, பயண அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். கடிதங்கள் போல் எளிய நடையில் அமைந்து உள்ளது.முதல் கடிதம், இதுவரை நடந்துள்ள உலகத் தமிழ் மாநாடுகள் பற்றிய விபரங்களை தெரிவிக்கிறது. அத்துடன், இந்த மாநாடு ஏற்பாடு விபரத்தையும் தெரிவிக்கிறது.மாநாடு நடக்கும் இடத்துக்கு பயணம் செய்த அனுபவத்துடன் துவங்கி, சுற்றுலா தகவல்களை தருகிறது. மாநாட்டு நிகழ்வுகள் குறித்த தகவல்களை தெளிவாக தருகிறது. தொடர்ந்து மாநாட்டு நிறைவு நிகழ்வுகளை விவரிக்கிறது. மாநாடு பயண அனுபவத்தை உரிய தகவல்களுடன் வெளிப்படுத்தும் நுால்.– மதி