/ இசை, இயல், நாடகம் / பஞ்ச சபைகளில் பரத நாயகன்
பஞ்ச சபைகளில் பரத நாயகன்
பரதநாட்டியக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் ஆய்வு நுால். சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஆடிய தாண்டவங்கள் குறித்து விளக்குகிறது. நடராஜரின் தத்துவங்களையும் குறிப்பிடுகிறது. திருவாலங்காட்டில் ரத்தின சபை, சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளி சபை, நெல்லையில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்ர சபை என சிறப்பை பெறுகிறது. தல புராணம், இலக்கியச் செய்திகள், திருவிழாக்கள், கோவில் அமைப்பு குறித்து விளக்கப்பட்டுள்ளது.– புலவர் ரா.நாராயணன்




