/ கதைகள் / ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அருளிய கதைகள்
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அருளிய கதைகள்
சிறுகதைகள் வழியாக இறையுண்மை, வாழ்வு நெறிகளை விளக்கும் நுால். பிள்ளையாராகவும், பெருமாளாகவும் இருப்பது கடவுள் தான். இதை அறியாமல் மதச்சண்டை போடுவோரை விமர்சிக்கிறது. நல்லவனாக காட்டிக்கொண்டால் நல்லவனாகவே ஆகிவிடலாம் என அறிவுறுத்துகிறது. இறைவன், நாரதருக்கு பக்தி பற்றி விளக்கிய கதையும் இடம்பெற்றுள்ளது. வகுத்த வழியில் பாவ புண்ணியங்களுக்கேற்ப வாழ்நாள் நிர்ணயக்கப்பட்டுள்ளதாக, ‘வாந்தி பேதி’ கதை விளக்கம் கூறுகிறது. அறியாமல் செய்யும் பிழை, தீமையையே கொடுக்கும் என்பதை, ‘ராமர் தவளை’ கதை சித்தரிக்கிறது. வாழ்வை செம்மைப்படுத்தும் நுால். – புலவர் சு.மதியழகன்




