/ வாழ்க்கை வரலாறு / சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையும் வரலாறும்
சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையும் வரலாறும்
சமுதாய புரட்சிக்கு லட்சியத்தோடு பாடுபட்ட சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நுால். ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்த நிகழ்வு, வெளிநாட்டு பயணங்கள், உலக கலாசாரத்திற்கு ஆற்றிய பங்களிப்பு கூறப்பட்டுள்ளன. உபதேசங்கள், உலகெங்கும் ராமகிருஷ்ண மிஷினை நிறுவியது விரித்துரைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற அவரது பொன்மொழிகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சமத்துவம், நல்லிணக்க மதிப்பை உலக மக்களுக்கு உணர்த்துவதாய் உரைகள் அமைந்ததை குறிப்பிடுகிறது. மனித குலத்தை மேன்மையுறச் செய்யும் அரிய நுால்.– புலவர் சு.மதியழகன்