Advertisement

நலம் நம் கையில் பாகம் – 2


நலம் நம் கையில் பாகம் – 2

₹ 190

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் மருத்துவ நுால்கள் எழுதுபவர், ‘மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன். இவர், ‘தினமலர்’ மதுரை பதிப்பில் ‘என் பார்வை’ பகுதியில் எழுதிய 34 மருத்துவ கட்டுரைகளின் தொகுப்பே இந்த நுால். தினமலர் நாளிதழில் வெளியான போதே பெரும் வரவேற்பை பெற்றது. அன்றாட வாழ்வில் சந்திக்கும் உடல் பிரச்னைகள், அதற்கான முன்னெச்சரிக்கை, தீர்வுகளை அழகாக விளக்கியுள்ளார் நுாலாசிரியர். உதாரணமாக, துாக்கம் உடலுக்கு எவ்வளவு அவசியம், மனச்சோர்வு போக்க என்ன வழி போன்ற விளக்க கட்டுரைகள், இன்றைய வாழ்வியல் முறைக்கு அவசியமானவை. சிறுநீரக கற்களை கரைக்க மருத்துவ வழிகள், பற்களை பாதுகாக்க எளிமையான முறைகள், வெயில், பனிக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி போன்ற பயனுள்ள தகவல்கள் ஏராளம். முட்டை நல்லதா, காபி, தேநீர் குடிக்கலாமா என்பது போன்ற மருத்துவ அறிவும், ஆலோசனையும் தரும் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது சிறப்பு. நோயற்று வாழ வழிகாட்டும் அற்புத மருத்துவ பெட்டகம்! – ஜி.வி.ஆர்.,

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்