பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (இரண்டு பாகம்)
தமிழக அரசின் ‘பாரதி விருது’ பெற்ற, அறிஞர் பெ.சு.மணியின், பாரதி பற்றிய ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்கள். இரண்டாம் பாகத்தில், 10 கட்டுரைகள் அடங்கி உள்ளன.இரண்டாம் பாகத்தில் குறிப்பிடத்தக்கவை:* யோகம், போகம், ஞானம் பற்றி தெளிவான கருத்துடையவர் பாரதி, என்பது இரண்டாம் பாகத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.* அரசியல், சமூக, பொருளாதார, தத்துவப் பயிற்சியுடன், உள்நாட்டு வெளிநாட்டு கதைகளைப் படிப்பதிலும், கதை சொல்லுவதிலும், எழுதுவதிலும் வல்லவர் என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.* மொழி, இனம், தேசியம் மூன்றும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை என்பதை பாரதி உணர்ந்திருக்கிறார். (பக்.91–148)* ஆன்மிகவாதியான பாரதியை, பொருள்முதல் வாதியான ஜீவானந்தம் எடுத்துரைக்கும் பாங்கு, இந்த நூலில் நல்ல திறனாய்வு கட்டுரையாக விளங்குகிறது.* பாரதியின் ‘மனப்பெண், மனத்திற்கு கட்டளை, நிலாவும் வான்மீனும் காற்றும்’ என்னும் மூன்று கவிதைகளின் கருத்துகளை, விளக்கியுள்ள விதம் (பக். 305 – 309) புதுமையாக உள்ளது.ஜே.ஆர்.இலட்சுமி